எனக்குள் ஒரு சின்ன ஆசை அனைத்து குறளையும் படித்து தெளிய வேண்டுமென்று. ஆனால் கொஞ்சம் கவிதை எழுத தெரியுமென்பதால் அதையே புதுகவிதை பாணியில் எழுதி புரிந்தும் புரிய வைக்கவும் முயற்சி செய்கிறேன். இது உங்களுக்கும் விருப்பமாகும் என்று உணர்கிறேன்.
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
புது கவிதையாய் பொருள்
...............................................
ஒப்பு என்பது தமக்கின்றி
ஒரே பொருளாய் கடவுளென்று
தவறாது நினைப்பவர் தவிர
தரணியில் மற்றவர்கெல்லாம்
மனக்கவலை தீரவே தீரா
மாண்புடன் வாழ்ந்து காட்டவே
வள்ளுவன் உயர்வழியை
வாழ்வியலை இருத்தலாமே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)