செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-8


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது. 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
அறக்கடல் விளக்கமாக 
அறியும் கடவுள் திருவடியை 
ஒருபோதும் தவறாது 
ஒன்றி வாழ்பவர்கள் தவிர 
ஏனைய பிறர்கெல்லாம் 
என்றென்றும் துன்பகடலாய் 
பிறவி பயன் அடையாமல் 
பிழையாகி வாழ்வாரே 
வள்ளுவன் குறள் பொருளை 
வளமாக்கி வாழலாமே. 

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-7




தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது. 


புது கவிதையாய் பொருள் 
............................................... 

ஒப்பு என்பது தமக்கின்றி 
ஒரே பொருளாய் கடவுளென்று 
தவறாது நினைப்பவர் தவிர 
தரணியில் மற்றவர்கெல்லாம் 
மனக்கவலை தீரவே தீரா 
மாண்புடன் வாழ்ந்து காட்டவே 
வள்ளுவன் உயர்வழியை 
வாழ்வியலை இருத்தலாமே.