செவ்வாய், 26 ஜூலை, 2011

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-6


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார். 

புது கவிதையாய் பொருள் 
............................................... 

ஐபுலனையும் வெற்றிகொண்டு 
ஐக்கியமான ஒருநிலையை 
ஒழுக்கமான உயர்வழியாய் 
யோகமாய் கொண்டவரை 
பின்பற்றி நாம் நடந்தால் 
பெரும் புகழ் வாழ்வு எய்தலாமே 
வள்ளுவர் சொல்வழியே 
வையத்தில் நாம் பெறுவோம்

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-5


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு 


புது கவிதையாய் பொருள் 
............................................... 

இறை பொருள் எதுவென்று 
எண்ணத்தில் கண்டுணர்ந்தால் 
நல்வினையும் தீவினையும் 
ஞானத்தின் சமநிலையால் 
விரும்புவது புகழென்றே 
வேறொன்றும் தோன்றாதே 
திருவள்ளுவர் வாய்மொழியை 
தெரிந்து நாம் வாழ்வோமே .


அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்- 4



வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல. 


புது கவிதையாய் பொருள் 
............................................... 

விருப்பு வெறுப்பு அப்பாற்பட்ட 
வேறுபடா பரம்பொருளை 
விவேகத்தில் நிலைநிறுத்தி 
வேண்டுதலாய் பெற்று கொண்டால் 
துன்பம் என்றும் தோன்றாது 
துவக்கி விடுவோம் நாமுமே 
வள்ளுவன் வாய்மொழியை 
வெல்லுவோம் உயர்வழியாய். 

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-3


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தான் 
நிலமிசை நீடுவாழ் வார் 


புது கவிதையாய் பொருள் 
............................................... 
நெஞ்சத்தில் அன்பு கொண்டு 
நிலைபொருளாய் கடவுளென்று 
தாமரை மலர கத்தில் 
தவறாது திருவடியை 
நினைவினிலே இருத்தும்போது 
நீங்காது முக்தியுண்டு 
வள்ளுவன் சொல்படி 
வாழ்ந்தது பார்த்தால் 

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-2



கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தோழாஅர் எனின் 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
தூய்மையான ஆறறிவில் 
துய்த்துணரும் கல்வியாலே 
கற்ற பயன் ஏதுமில்லை 
கடவுளடி தொழாதான் 
கன்னித்தமிழ் குறளாலே 
காலம் தோறும் அறிவிக்க 
திருவள்ளுவன் வாய்மொழியை 
தெரிந்தொழுகுவோம் வாருங்கள்

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-1



 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு. 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
எழுத்துகளில் முதலென்று 
எம்மொழியில் உயர்வென்று 
உதட்டளவில் இல்லாமல் 
உள்ளொலியில் உச்சரித்தே 
"அ"கரமாக வெளிப்பட்ட 
அமுதவடிவு போலவே 
அகிலம் முழுதும் 
அனைத்து உயிர்களும் 
ஆதி பகவனை முதலாய் கொள்ளும் 
அதுவே வள்ளுவன் குறட்பொருள்.