செவ்வாய், 26 ஜூலை, 2011

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-5


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு 


புது கவிதையாய் பொருள் 
............................................... 

இறை பொருள் எதுவென்று 
எண்ணத்தில் கண்டுணர்ந்தால் 
நல்வினையும் தீவினையும் 
ஞானத்தின் சமநிலையால் 
விரும்புவது புகழென்றே 
வேறொன்றும் தோன்றாதே 
திருவள்ளுவர் வாய்மொழியை 
தெரிந்து நாம் வாழ்வோமே .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக