செவ்வாய், 26 ஜூலை, 2011

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-6


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார். 

புது கவிதையாய் பொருள் 
............................................... 

ஐபுலனையும் வெற்றிகொண்டு 
ஐக்கியமான ஒருநிலையை 
ஒழுக்கமான உயர்வழியாய் 
யோகமாய் கொண்டவரை 
பின்பற்றி நாம் நடந்தால் 
பெரும் புகழ் வாழ்வு எய்தலாமே 
வள்ளுவர் சொல்வழியே 
வையத்தில் நாம் பெறுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக