செவ்வாய், 26 ஜூலை, 2011

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்- 4



வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல. 


புது கவிதையாய் பொருள் 
............................................... 

விருப்பு வெறுப்பு அப்பாற்பட்ட 
வேறுபடா பரம்பொருளை 
விவேகத்தில் நிலைநிறுத்தி 
வேண்டுதலாய் பெற்று கொண்டால் 
துன்பம் என்றும் தோன்றாது 
துவக்கி விடுவோம் நாமுமே 
வள்ளுவன் வாய்மொழியை 
வெல்லுவோம் உயர்வழியாய். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக