ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-10


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார். 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
கடவுளின் திருவடியயை 
கருத்தினால் கொண்டவர்கள் 
கடந்திடுவர் பூமியிலே 
கண்டுவிட்ட பிறவிபயன் 
கடக்காமல் மற்றவரெல்லாம் 
கலங்கிதான் கிடப்பாரே 
பிறவிபயன் சேராமல் 
பேதமையில் உழல்வாரே 
வள்ளுவர் தமிழ்வழியை 
வாழ்வாக்கி கொள்ளலாமே 

திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-9


கடவுள் வாழ்த்து 

குறள்-9 
................................. 
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை. 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
நல்ல குணத்தின் இருப்பிடமாம் 
நம் எண்ணம் இறைவனிடம் 
பொருந்தாமல் இருக்கும் வாழ்வோ 
புலனுடைய தலையினிலே 
கண் கூட பார்க்காமல் 
காது கூட கேட்காமல் 
பயனில்லா உடல்போலே 
பாழ் பட்டு இருக்குமே 
குறள் சொல்லும் வள்ளுவன் வழி 
கூறி நாம் வாழலாம்தானே