எனக்குள் ஒரு சின்ன ஆசை அனைத்து குறளையும் படித்து தெளிய வேண்டுமென்று. ஆனால் கொஞ்சம் கவிதை எழுத தெரியுமென்பதால் அதையே புதுகவிதை பாணியில் எழுதி புரிந்தும் புரிய வைக்கவும் முயற்சி செய்கிறேன். இது உங்களுக்கும் விருப்பமாகும் என்று உணர்கிறேன்.
புது கவிதையாய் பொருள் ............................................... நல்ல குணத்தின் இருப்பிடமாம் நம் எண்ணம் இறைவனிடம் பொருந்தாமல் இருக்கும் வாழ்வோ புலனுடைய தலையினிலே கண் கூட பார்க்காமல் காது கூட கேட்காமல் பயனில்லா உடல்போலே பாழ் பட்டு இருக்குமே குறள் சொல்லும் வள்ளுவன் வழி கூறி நாம் வாழலாம்தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக