ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-9


கடவுள் வாழ்த்து 

குறள்-9 
................................. 
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை. 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
நல்ல குணத்தின் இருப்பிடமாம் 
நம் எண்ணம் இறைவனிடம் 
பொருந்தாமல் இருக்கும் வாழ்வோ 
புலனுடைய தலையினிலே 
கண் கூட பார்க்காமல் 
காது கூட கேட்காமல் 
பயனில்லா உடல்போலே 
பாழ் பட்டு இருக்குமே 
குறள் சொல்லும் வள்ளுவன் வழி 
கூறி நாம் வாழலாம்தானே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக